Um-kanneerai-thudaikum-thevan-tamil123

உம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்

தேவன் மனிதனைத் தம் சாயலிலும் ரூபத்திலும் சிருஷ்டித்தார். தேவன் அவனைச் சிருஷ்டித்த நாளில் அவன் தேவனோடு ஐக்கியம் உள்ளவனாக  தனக்குள்ளே சந்தோஷ  சமாதானம் உள்ளவனாக  மற்ற ஜீவராசிகளோடு பகையின்றி ஒற்றுமையுள்ளவனாக வாழ்ந்து வந்தான். எனினும் அந்நிலையில் காக்கப்பட்டிருக்க வேண்டிய மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படியாதவனாய்ப் பாவஞ்செய்து  தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனித்தவனானான். பாவ இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவன் தன் சந்தோஷ சமாதானத்தை இழந்தான். அதுமுதல் மனிதன் தன் வாழ்வில் பலவித போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறான். வியாதி  மரணபயம்  பசி  கடன்தொல்லை  நிந்தைகள்  குடும்பத்தில் பிரிவினை  வேலையில்லாத் திண்டாட்டம் பில்லிசூனியக் கட்டுகள் போன்றவற்றின் மூலம் அவன் நாள்தோறும் நோய்கொண்டு ஒடுங்குகிறான். இந்நிலையில் அவன் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவழியின்றி  என்னை நேசிக்க  விசாரிக்க  என் மனபாரத்தைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையா என்று எண்ணிக் கலங்குகிறான். இவற்றினால் நிராசையடைந்து தற்கொலை செய்துகொள்வாரும் உண்டு.

துயரமான இந்நிலையில் யாரிடம் செல்வேன் என்று கலங்கும் நண்பனே! உம் நிலைமையை முற்றிலும் அறிந்த ஆண்டவராகிய இயேசு உமக்காக ஜீவிக்கிறார். அவர் உம்மை விடுவிக்க வல்லவர். அவர் உம்மேல் மனதுருக்கம் உள்ளவர். ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று அவர் உம்மை அழைக்கிறார். அந்த ஆண்டவராகிய இயேசுவன்டை நீர் வருவீராக.

‘நான் அந்த இயேசுவிடம் வரும்படி அவர் யார்? நான் அவரை அறியேன்” என்பீரேயாகில்  இதோ  நாங்கள் இக்கைப்பிரதியின் மூலம் அவரை உமக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவரே மனுக்குலத்தைச் சிருஷ்டித்த கர்த்தர். பாவஞ்செய்ததினிமித்தம் மனுஷன் தம்மை விட்டுப் பிரிந்து கொடிய வேதனைகளை அனுபவிப்பதை அறிந்தவராய் அவர் மனுஷன்பால் கொண்ட நேசத்தால்  அவனுக்காக மானிடனாக  பாவசம்பந்தமற்றவராய்  கன்னிகையின் வயிற்றில் பிறந்தார். அவர் இப்பாவ உலகில் பரிசுத்தராய் வாழ்ந்தார். அவரில் பாவம் இல்லை. அவர் பாவம் செய்யவில்லை. அவர் பாவம் அறியாதவராயிருந்தார். வியாதியஸ்தரைச் சுகமாக்குகிறவராய்  குருடரின் கண்களைத் திறக்கிறவராய் குஷ்டரோகிகளைச் சொஸ்தமாக்குகிறவராய்  பிசாசின் பிடியிலிருந்து ஜனங்களை விடுவிக்கிறவராய்  அவர் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார். எனினும் மனுக்குலத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக அவர் வந்தமையால் மனிதனுடைய மீட்புக்காக அவர் கல்வாரிச் சிலுவையில் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அவர் பாவமில்லாத பரிசுத்தராயிருந்தபடியால் மரித்து அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இவ்விதம் அவர் மனிதனுடைய பாவங்களையும் சாபங்களையும் வியாதிகளையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு மனிதனுக்காக மரித்து உயிர்த்தெழுந்து இன்றும் என்றும் மாறாதவராய் இன்றும் உமக்காக ஜீவித்துக்கொண்டிருக்கிறார். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவான் (அப். 10:43). அவரை விசுவாசித்து உம் பாவங்களை மெய்மனஸ்தாபத்தோடு அவரிடம் அறிக்கை செய்தால்  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி  உம்மைச் சுத்திகரிக்கும்      (1 யோவான் 1:7).

இப்போதும் அவர் உம்மோடு பின்வருமாறு பேசுகிறார்: ‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்  உன் கண்ணீரைக் கண்டேன்; … நான் உன்னைக் குணமாக்குவேன்” (2 இராஜா. 20:5); ‘துக்கப்படுகிறவர்களுக்கு … ஆறுதல் அளிப்பேன்” (ஏசா. 57:18); ‘இனி நீ அழுதுகொண்டிராய்”  ‘உன் துக்கநாட்கள் முடிந்துபோம்” (ஏசாயா 30:19; 60:20).

இதை வாசிக்கும் நண்பரே! உம்மை விசாரிக்கும்படி  உம் துக்கங்களைச் சுமக்கும்படி  உம் கவலைகளைப் போக்கும்படி உம் கண்ணீரைத் துடைக்கும்படி  உமக்கு சமாதான சந்தோஷம் தரும்படி  உம்மை மணர பயத்திலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவிக்கும்படி  உமக்குத் தூய்மையான வாழ்வளித்து மோட்ச உலகத்தில் உம்மைச் சேர்க்கும்படி ஆண்டவராகிய இயேசு உமக்காகவே ஜீவிக்கிறார். இன்றே இப்போதே அவரண்டை வருவீராக! நாளை உம்முடையதல்ல. ‘இதோ  இப்பொழுதே அநுக்கிரககாலம்  இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2).

உம் கண்ணீர்  கவலைகளிலிருந்து விடுதலைபெற கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்துப் பின்வரும் ஜெபத்தைச் சொல்வீராக:

‘கர்த்தராகிய இயேசுவே  நீர் என் பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும். உம்மை என் தெய்வமாகவும் இரட்சகராகவும் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். என் கவலைகளையெல்லாம் மாற்றி உம் சந்தோஷத்தால் என்னை நிரப்பும். உமக்காகவே நான் ஜீவிப்பேன். ஆமென்”.