do-you-know123

 

 உங்களுக்குத் தெரியுமா?

கர்த்தர் கண்களில் நீங்கள் ஓரு பாவியென்று? எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23) நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது (1 யோவான் 1:8)  மரணத்தையும் கர்த்தரையும்,நீங்கள் சந்திக்கவேண்டும்? அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)  கர்த்தரால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்? இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத்  தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா? (ரோமர் 2:3)  கர்த்தரோடு இயைந்த வாழ்க்கை இல்லையெனில், நித்திய அக்கினிககுள் தள்ளப்படுவீர்கள்? துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும்,  நரகத்திலே தள்ளப்படுவார்கள். (சங் 9:17) அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.(மத் 13:42)  கர்த்தரோடு ஒப்புரவாக ஒரு வழி இருக்கிறது? துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்(யோவான்; 3:16)

நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள  நான் என்ன செய்யவேண்டும்?

1.மனந்திரும்புங்கள்: அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.(அப் 17:30)

2.இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்: அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.  (யோவான் 1:12)

3.கர்த்தரிடம்; உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்: உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (1 யோவான் 1:9)

4.சுவிசேஷத்தின் படி நடவுங்கள்: அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். (யாக்கோபு 1:22)  என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். (நீதி 7:2)

 

You can find equivalent English tract @

Do you know?